Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராமநாதபுரத்தில் உலக மகளிர் தினத்தையொட்டி மகளிர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

மார்ச் 09, 2021 02:19

ராமநாதபுரம் : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார்.சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையிலும், வரும் சட்டமன்ற  தேர்தலையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ராமநாதபுரம் அரண்மனை முன்  மகளிர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

இதில் 600க்கும் மேற்பட்ட  மகளிர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு 100 சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது நம் கடமை என்பதை உணர்த்தும் வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு பேரணியில் சென்றனர்.மத்திய கொடிக்கம்பம், சாலைத்தெரு, ரோமன் சர்ச் வழியாக சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியை இந்த பேரணியானது வந்தடைந்தது.அங்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பெண்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர்  வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இந்த பேரணியில்  காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா,  கூடுதல் ஆட்சியர் பிரதீப் குமார், காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீர பாண்டியன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மக்கள் இயக்க திட்ட மேலாளர் தெய்வேந்திரன்  உள்பட பலர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்